ஆப்நகரம்

ஊரடங்கு முடிந்து ஊருக்கு போறவங்களுக்கு குட் நியூஸ்; லாக்டவுன் நீடிக்க வாய்ப்பில்லை?

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ரயில், விமான பயணங்களுக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Samayam Tamil 1 Apr 2020, 8:17 pm
டெல்லி: ஊரடங்கிற்கு பிந்தைய ரயில், விமான பயணங்களுக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா வைரஸால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1600ஐ தாண்டியுள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், பிரதமர் மோடியின் வலியுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடந்த 22ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதனிடையே, கொரோனா சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, நாடு முழுவதும் 75 மாவட்டங்கள் மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை மத்திய அரசால் முடக்கப்பட்டது.

இதனையடுத்து, நாட்டு மக்களிடையே மார்ச் மாதம் 24ஆம் தேதியன்று உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மட்டுமே இயங்கும் என தெரிவித்த மத்திய அரசு, இது தொடர்பான வழிகாட்டுதல்களையும் வழங்கியது.

கொரோனா வைரஸ் பற்றி நமக்கு என்ன தெரியும், என்ன தெரிந்து கொள்ள வேண்டும்?

அதன்படி, ரயில்கள், விமானங்கள், சாலை போக்குவரத்து என பொதுப் போக்குவரத்து, வர்த்த ரீதியான அத்தியாவசியமற்ற போக்குவரத்து அனைத்தும் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டன. இதனால், பொதுமக்கள் ஆங்காஙே முடங்கி கிடக்கின்றனர். அதேசமயம், ஊரடங்கு உத்தரவானது மேலும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி பொதுமக்களிடையே பரவலாக எழுந்தது. இதற்கு விளக்கமளித்த மத்திய அமைச்சரவை செயலர், ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் எண்ணம் தற்போது வரை இல்லை என தெரிவித்தார்.

இந்நிலையில், ஊரடங்கு காலகட்டத்துக்கு பின்னர், அதாவது ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிந்தைய ரயில், விமான பயணங்களுக்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஊராடங்கு உத்தரவு நீட்டிக்கப்படாது எனவும் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி