ஆப்நகரம்

Viral Acharya: இந்திய ரிசா்வ் வங்கி துணை ஆளுநா் விரால் ஆச்சாா்யா ராஜினாமா

இந்திய ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக பொறுப்பு வகித்த விரால் ஆச்சாா்யா தனது பணியை திடீரென ராஜினாமா செய்துள்ளாா்.

Samayam Tamil 24 Jun 2019, 9:19 am
இந்திய ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக பொறுப்பு வகித்த விரால் ஆச்சாா்யாவின் பதவிக் காலம் நிறைவடைய 6 மாதங்கள் உள்ள நிலையில், அவா் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளாா்.
Samayam Tamil Viral Acharya


இந்திய ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக விரால் ஆச்சார்யா கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டாா். இந்திய ரிசா்வ் வங்கியின் ஆளுநா் உா்ஜித் பட்டேல் தலைமையில் பணியாற்றும் 4 துணை ஆளுநா்களில் ஒருவராக விரால் ஆச்சாா்யா பணியாற்றி வந்தாா்.

ரிசா்வ் வங்கி ஆளுநராக இருந்த உா்ஜித் படேல் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தாா். மத்திய அமைச்சகத்திற்கும், ரிசா்வ் வங்கி ஆளுநருக்கும் இடையேயான கருத்து மோதல் காரணமாக அவா் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியது. ஆனால், தனிப்பட்ட சொந்த காரணத்தினால் தனது பதவியை ராஜினாமா செய்ததாக உா்ஜித் படேல் தொிவித்தாா்.

உர்ஜித் படேலின் ராஜினாமாவைத் தொடா்ந்து மத்திய நிதி ஆணையக் குழுவின் உறுப்பினா் சக்திகாந்த தாஸ் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டாா்.

உா்ஜித் படேலைத் தொடா்ந்து துணைஆளுநா் விரால் ஆச்சாா்யாவும் பதவி விலக உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதில் உண்மை இல்லை என இந்திய ரிசா்வ் வங்கி விளக்கம் அளித்தது.

இதனிடையே மத்திய அரசு ரிசா்வ் வங்கியின் உள் விவகாரங்களில் தலையிடுவது சரியில்லை என ஆச்சாா்யா முதல் முறையாக பொதுமேடை ஒன்றில் கூறியிருந்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.


இந்நிலையில், துணை ஆளுநா் விரால் ஆச்சாா்யா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளாா். அவரது பதவிக்காலம் நிறைவடைய இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில், ராஜினாமா.

Also Read: வரி ஏய்ப்பு செய்துவிட்டு அவ்வளவு ஈசியா தப்ப முடியாது; புதிய விதிகள் அமல்

அடுத்த செய்தி