ஆப்நகரம்

ரூபாய் நோட்டில எழுதியிருந்த வாங்கிக்கோங்க: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

ரூபாய் நோட்டில் எழுதியிருந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

TNN 27 Apr 2017, 12:36 pm
டெல்லி: ரூபாய் நோட்டில் எழுதியிருந்தால் வாங்கிக் கொள்ளலாம் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil reserve bank orders to banks for take written rupee notes
ரூபாய் நோட்டில எழுதியிருந்த வாங்கிக்கோங்க: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு


இந்தியாவில் உள்ள வங்கிகள் அனைத்திற்கும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளது. அதில் ரூபாய் நோட்டுக்களில் எழுதியிருந்தால் வங்கிகள் வாங்க மறுப்பதாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரூ.500, ரூ.2000 நோட்டுக்களில் எழுதி இருந்தாலோ, கிறுக்கல்கள் இருந்தாலோ வங்கிகள் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. மேலும் ரூபாய் நோட்டின் நிறம் மங்கி இருந்தாலும் கட்டாயம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுக்கும் வங்கி அலுவலர்கள், வங்கி கிளைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு, ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை ஒன்று அனுப்பி இருந்தது. அதில் பொதுமக்களோ, வங்கி அலுவலர்களோ ரூபாய் நோட்டுகளில் எழுதக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது எழுதப்பட்ட, நிறம் குன்றிய, அழுக்கடைந்த நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Reserve Bank orders to Banks for take written rupee notes.

அடுத்த செய்தி