மஹாராஷ்டிர மாநிலத்தில், உணவகங்கள் நள்ளிரவு 12 மணி வரையும், கடைகள் 11 மணி வரையும் செயல்பட அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை காரணமாக, நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மஹாராஷ்டிரா தான். அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 லட்சத்திற்கும் மேல் உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையிலும் மஹாராஷ்டிர மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் மஹாராஷ்டிர மாநிலத்தில் அண்மைக் காலமாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநில அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, இன்று முதல், உணவகங்கள் நள்ளிரவு 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இதே போல், கடைகள் இரவு 11 மணி வரை இயங்கலாம். உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது மிக அவசியம்.
அரசால் அனுமதி அளிக்கப்பட்ட அனைத்து பிற அமைப்புகளும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. உணவகங்கள், கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க உள்ளூர் நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் உண்டு. கடைகள் இயங்கும் நேரத்தை சிறப்பு அனுமதி இல்லாமல் நீட்டிக்கக் கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 22 ஆம் தேதி முதல், 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அம்மாநில அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை காரணமாக, நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மஹாராஷ்டிரா தான்.
இந்நிலையில், மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, இன்று முதல், உணவகங்கள் நள்ளிரவு 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இதே போல், கடைகள் இரவு 11 மணி வரை இயங்கலாம். உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது மிக அவசியம்.
அரசால் அனுமதி அளிக்கப்பட்ட அனைத்து பிற அமைப்புகளும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. உணவகங்கள், கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க உள்ளூர் நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் உண்டு. கடைகள் இயங்கும் நேரத்தை சிறப்பு அனுமதி இல்லாமல் நீட்டிக்கக் கூடாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 22 ஆம் தேதி முதல், 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அம்மாநில அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.