ஆப்நகரம்

'இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது'

நாடாளுமன்ற உறுப்பினர்களின் (எம்.பி.) தனி உதலியாளர்கள், ஓய்வுபெற்ற அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்கு நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

Samayam Tamil 5 Jun 2020, 1:06 am
நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.
Samayam Tamil parliament


இதன்படி, 'நாடாளுமன்ற செயலக அலுவலகங்களில் இணைச் செயலாளர் நிலைக்கு கீழுள்ள அதிகாரிகளை காணவரும் ஓய்வுபெற்ற அதிகாரிகள், விருந்தினர்கள், பார்வையாளர்கள் ஆகியோர் இனி நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.

மறு உத்தரவு வரும்வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். இந்த உத்தரவு கடுமையாக செயல்படுத்தப்படுவதை நாடாளுமன்ற செயலக உயரதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்' என்று நாடாளுமன்ற பாதுகாப்புப் பணிகள் துறை இயக்குநர் பி.சி. ஜோஷி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.க்களின் பி.ஏ.க்களுக்கும் தடை: இதேபோன்று, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் (எம்பி) தனி உதவியாளர்கள் (பிஏ) நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில், எம்.பி.க்களின் தனி உதவியாளர்கள் 800-க்கும் மேற்பட்டோர் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வந்துச் சென்றால், கொரோனாவின் காரணமாக நிலைமை மோசமாக வாய்ப்புள்ளது. எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

அடுத்த செய்தி