ஆப்நகரம்

Ram Janmabhoomi: சர்ச்சைக்குரிய இடம் தவிர, மற்ற இடங்களை உரிமையாளர்களுக்கே வழங்குங்கள்- மத்திய அரசு

அயோத்யாவில் உள்ள ராம ஜென்ம பூமி மற்றும் பாபர் மசூதி ஆக்கிரமிப்பு இடங்களில், சர்ச்சைக்குரிய இடம் தவிர, கையகப்படுத்தப்பட்ட மற்ற இடங்களை மீண்டும் அதன் உரிமையாளர்களுக்கே வழங்குங்கள் என மத்திர அரசு உச்சநீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 30 Jan 2019, 9:49 am
ஸ்ரீ ராமனின் பிறப்பிடமான ஸ்ரீ ராம ஜன்ம பூமியில் அவரது நினைவை மகிமைப்படுத்த 2100 ஆண்டுகளுக்கு முன்னர் சாகரி சாம்ராட் விக்ரமாதித்யா 84 தொடுதூண்கள் கொண்டு ஸ்ரீ ராமரின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டது. பின்னர் வெவ்வேறு காலகட்டத்தில் ராம ஜன்ம பூமிக்கு சிதைவு ஏற்ப்பட்டது.
Samayam Tamil ram jenma boomi


இதில் சராயூ நதிக்கரையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இங்கு கஹத்வால் காலகட்டத்தில் பாபர் கோயில் எழுப்பப்பட்டது.
பின்னர் 482 ஆண்டுகளுக்கு முன்பு, 1528 பொது சகாப்தத்தில் மொகாலிய மன்னர் பாபர் இந்தப் பகுதி மீது படையெடுத்தபோது அவரது தளபதியான மிர் பாகி என்பவரால் அக்கோயில் இடிக்கப்பட்டது. இப்படித் தாங்கள் செல்லும் இடங்களிலும், வெல்லும் இடங்களிலும் மசூதிகளைக் கட்டுவதை முகலாய அரசர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அங்கு கட்டப்பட்டது பாபர் மசூதி என அழைக்கப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றண்டுவரை அமைதியாக இருந்த இந்துக்கள் பின்னர் அங்கு மீண்டும் ராமர் கோயில் வர வேண்டும் என விரும்புகின்றனர்.

அப்போது முதன்முதலாக 15 நாட்கள் மொகாலிய படை வீரர்களை எதிர்த்து ஸ்ரீ ராம பக்தர்கள் போரில் ஈடுபட்டனர். அப்போது படையெடுப்பாளர்கள் 176,000 ராம பக்தர்கள் மீது பீரங்கியைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ராம ஜென்ம பூமியை பாதுகாக்க பக்தர்கள் தங்களது உயிரை நீத்தனர்.

ஆயோத்யாவில் உள்ள பாப்ரி மசூதி மற்றும் ராம ஜென்ம பூமி பிரச்னை 1993ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அப்போது ஏற்பட்ட பயங்கர அரசியல் மற்றும் மதக்கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். 26 வருடங்களாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
அயோத்தி விவகாரத்தில் சமரச முயற்சிகள் நடந்து கொண்டுதான் உள்ளன.

அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயில் கட்டுவதற்கு ஓரிரு மாதங்களில் முடிவு எட்டப்பட்ட விடும் என்று சங்கப்பரிவார் அமைபுகள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. இதற்கான முழு ஏற்பாடுகளையும் இந்து மத ஆர்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பீகார் மாநிலம் சோனிபூரில் உள்ள சாந்தி சமாஜ்ய உறுப்பினர்கள் ஸ்ரீ ராமர் கோயில் கட்டப்படும் நேரத்துக்கு அதற்கான முனைப்போடு தயார் நிலையில் இருக்கின்றனர்.

இது குறித்து சரியான முடிவு எடுக்கப்படாவிட்டால் சாதுக்களும் சங்க உறுப்பினர்களுமே தன்னிச்சையாக கோயில் கட்டும் பணிகளை மேற்கொள்வர் என்ற முடிவுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது அயோத்யாவில் உள்ள ராம ஜென்ம பூமி மற்றும் பாபர் மசூதி ஆக்கிரமிப்பு இடங்களில், சர்ச்சைக்குரிய இடம் தவிர, கையகப்படுத்தப்பட்ட மற்ற இடங்களை மீண்டும் அதன் உரிமையாளர்களுக்கே வழங்குங்கள் என மத்திர அரசு உச்சநீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

67.703 ஏக்கர் நிலத்தினை 1993ம் ஆண்டு அரசு கையகப்படுத்தியது. இதில் 67.39 ஏக்கர் நிலத்தினை அதன் உரிமையாளர்களுக்கு மீண்டும் திருப்பித் தர மோடி அரசு வலியுறுத்துகிறது. இதனை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும் வரவேற்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் ராமர் கோவில் கட்டப்படும் என பாஜ., நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இது நடக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி