ஆப்நகரம்

கோபத்தில் கொதித்த விவசாயிகள்; ரூ.4 கோடி நஷ்டத்தை சந்தித்த டோல்கேட்!

விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Oct 2020, 3:04 pm
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக வட இந்திய விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 30க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் கைகோர்த்து எதிர்ப்பை காட்டிக் கொண்டிருக்கின்றனர். ரயில் பாதைகள், டோல்கேட்கள் உள்ளிட்ட இடங்களில் மறியலில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 23 டோல்கேட்கள் செயல்பட்டு வருகின்றன.
Samayam Tamil Farmers Protest


இவை கொரோனா ஊரடங்கால் கடும் வருவாய் இழப்பை சந்தித்தன. இந்நிலையில் மீண்டும் ஒரு பாதிப்பைச் சந்தித்து வருகிறது. அதாவது வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தியதன் விளைவாக 17 டோல்கேட்களில் கடந்த 6 நாட்களில் 4 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் அந்த டோல்கேட் வழியாக சென்ற வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க விவசாயிகள் அனுமதிக்கவில்லை. அதேசமயம் வாகனங்களையும் தடுக்கவில்லை. இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசிய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சண்டிகர் மண்டல அதிகாரி ஆர்.பி.சிங், பஞ்சாப் தலைமை செயலாளரை சந்தித்து டோல்கேட் வருவாய் இழப்பு குறித்து எடுத்துரைக்க உள்ளோம்.

விவசாய மசோதாக்களுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு? இதிலிருக்கும் சிக்கல்கள் என்னென்ன?

விவசாய அமைப்புகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி டோல்கேட் கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதுபற்றி விவசாய அமைப்புகள் கூறுகையில், எங்களின் போராட்டம் ஒரு உக்தி.

மத்திய அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் போராடி வருகின்றோம். இதனால் ஏற்படும் அழுத்தத்தின் மூலம் வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றுக் கொள்ளும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி