ஆப்நகரம்

ஹாியானா கலவரம்- அரசு மீது நீதிபதி காட்டம்

ஹாியானாவில் நடைபெற்ற கலவரம் தொடா்பாக அம்மாநில உயா்நீதிமன்றம், மோடி பாஜகவுக்கு மட்டும் பிரதமர் கிடையாது, இந்தியாவுக்கே பிரதமர் என்று கோபமாக கருத்து தெரிவித்துள்ளது.

TOI Contributor 26 Aug 2017, 9:11 pm
ஹாியானாவில் நடைபெற்ற கலவரம் தொடா்பாக அம்மாநில உயா்நீதிமன்றம், மோடி பாஜகவுக்கு மட்டும் பிரதமர் கிடையாது, இந்தியாவுக்கே பிரதமர் என்று கோபமாக கருத்து தெரிவித்துள்ளது.
Samayam Tamil riot in haryana highcourt judge alligates the government
ஹாியானா கலவரம்- அரசு மீது நீதிபதி காட்டம்


பாலியல் தொடா்பான வழக்கில் தேரா சச்சா தலைவர் ராம் ரஹீம் குற்றவாளி என பஞ்ச்குலா சி.பி.ஐ. நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இதையடுத்து தேரா சச்சா ஆதரவாளர்கள் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
வன்முறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உளவுத்துறை எச்சரித்திருந்தும்கூட, ஹாியானா அரசு பல லட்சம் பேரை பஞ்ச்குலா நகருக்குள் அனுமதித்திருந்தது. பல லட்சம் போ் ஒன்று கூடியிருந்த நிலையில் தீா்ப்பு வெளியான அடுத்த சில மணித் துளிகளில் கலவரம் வெடிக்கத் தொடங்கியது.

காவல் துறையினரால் உடனடியாக கலவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. காவல் நிலையம், ரயில் நிலையம், ரயில்களும் தீக்கிறையாக்கப்பட்டன. கலவரத்தில் பெண்கள் உள்ளபட உயிாிழந்தவா்களின் எண்ணிக்கை 36ஆக உயா்ந்துள்ளது. 200க்கும் அதியமானோா் படுகாயம் அடைந்தனா்.

செய்தியாளா்களின் வாகனங்கள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டு, செய்தியாளா்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்த வழக்கை இன்று விசாரித்தது பஞ்சாப்-ஹரியானா உயா்நீதிமன்றம். மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சத்யா பால் ஜெயின் ஆஜரானார். இது மாநில அரசின் பிரச்சினை என்று அவர் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

இதனால் கடுமையாக கோபமைடந்த நீதிபதி ஹரியானா இந்தியாவில் இல்லையா? ஏன் பஞ்சாப்-ஹரியானா மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுகிறது? என்று கேள்வி எழுப்பினார். மேலும், பாஜகவுக்கு மட்டுமே மோடி பிரதமர் கிடையாது. அவர் இந்தியா முழுமைக்குமான பிரதமர் என்றும் நீதிமன்றம் கோபம் வெளிப்படுத்தியது.

முன்னதாக மாநில அரசு மீது கருத்து தொிவித்த நீதிபதி உங்களின் அரசியல் ஆதாயத்திற்காக மாநிலத்தை எாியவிட்டிருக்கிறீா்கள். இந்த சம்பவத்தின் மூலம் மாநில அரசு வன்முறையாளா்களிடம் சரணடைந்து விட்டதாக தொிவித்தாா்.

Riot in Haryana Highcourt judge alligates the government

அடுத்த செய்தி