ஆப்நகரம்

10 தோட்டாக்களுடன் விமானம் ஏற முயன்ற எம்.எல்.ஏ. கைது

விமானத்தில் பயணிப்பதைத் தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அவரிடம் தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கும் ஆவணங்கள் இருக்கிறதா என விசாரித்துள்ளனர். ஆவணங்களை எதையும் அளிக்காத அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் எனக் கூறப்படுகிறது.

Samayam Tamil 22 Feb 2019, 6:42 pm
டெல்லி விமான நிலையத்தில் பத்து தோட்டாக்களுடன் விமானத்தில் பயணிக்க முயன்ற ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil delhi-airport_660_061513092614


பீகார் மாநிலத்தின் மதேபுரா தொகுதியின் எம்.எல்.ஏ. சந்திர சேகர். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர் பிப்ரவரி 20ஆம் தேதி பாட்னா செல்ல டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவர் எடுத்து வந்த பையில் 10 துப்பாக்கித் தோட்டாக்கள் இருப்பது விமான நிலைய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் 3.15 போர் ரக தோட்டாக்கள் எனத் தெரிந்தது. இதனையடுத்து அவர் விமானத்தில் பயணிப்பதைத் தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அவரிடம் தோட்டாக்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கும் ஆவணங்கள் இருக்கிறதா என விசாரித்துள்ளனர்.
ஆவணங்களை எதையும் அளிக்காத அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் எனக் கூறப்படுகிறது.

இரண்டு வாரங்கள் முன்பு ராய்பூர் செல்லும் விமானத்தில் ஒருவர் 15 தோட்டாக்களுடன் ஏற முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார். இந்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு விதிகளின்படி, பயணிகள் விமானத்தில் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை எடுத்தச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி