ஆப்நகரம்

சாலை விபத்துகளில் சிக்கி 1.48 லட்சம் பேர் உயிரிழப்பு- ஆய்வில் அதிர்ச்சி

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம், கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற சாலை விபத்துகள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 9 Oct 2018, 1:12 pm
நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு சாலை விபத்துகளில், கடந்தாண்டு நாளொன்றுக்கு தலைக்கவசம் அணியாததால் 98 பேரும், சீட் பெல்டு அணியாமல் சென்றதால் 79 பேரும் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
Samayam Tamil maxresdefault
சாலை விபத்துகள் குறித்து ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்


மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் 2017ம் ஆண்டில் நடைபெற்ற சாலை விபத்துகள் தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பல அதிர்ச்சியளிக்கும் விவரங்கள் தெரியவந்துள்ளன.

போக்குவரத்து விதிகளை மீறி, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களில் 36 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல காரில் சீட் பெல்டு ஆணியாமல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8708-ஆக உள்ளது.

அதன்படி, 2017ம் ஆண்டு ஏற்பட்ட பல்வேறு சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 48 ஆயிரமாக உள்ளது. மேலும், கைப்பேசியில் பேசிய படியே வாகனம் ஓட்டியதால் ஒருநாளைக்கு ஏற்பட்ட உயிரிழப்பு 9 ஆக உள்ளது.

தமிழ் நாட்டில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்றவர்களில் 5211 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல சீட் பெல்டு அணியாமல் காரின் சென்ற போது ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 3497 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக இருசக்கர வாகன பயணத்தின் போது ஏற்பட்ட விபத்துகளில், பின்னால் அமர்ந்து சென்றவர்களில் 42 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் செய்த ஆய்வுகளின் படி, 67 சதவீத பேர் சாலையில் வாகனம் இயக்கத்தில் இருந்த போதே விபத்து ஏற்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டிய போது ஏற்பட்ட விபத்துக்களில் சிக்கி 4776 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி