ஆப்நகரம்

டெல்லி அஞ்சல் நிலையத்தில் கொள்ளை; பண மூட்டைகள் திருடப்பட்டதால் ஊழியர் அதிர்ச்சி!

தலைநகர் டெல்லியில் உள்ள அஞ்சல் நிலையம் ஒன்றில் இருந்து, கொள்ளையர்கள் சிலர் பண மூட்டைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 20 Feb 2017, 10:34 am
தலைநகர் டெல்லியில் உள்ள அஞ்சல் நிலையம் ஒன்றில் இருந்து, கொள்ளையர்கள் சிலர் பண மூட்டைகளை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil robbery at a post office in delhis anand vihar 17 cash bags looted
டெல்லி அஞ்சல் நிலையத்தில் கொள்ளை; பண மூட்டைகள் திருடப்பட்டதால் ஊழியர் அதிர்ச்சி!


அங்குள்ள ஆனந்த் விஹார் பகுதியில் செயல்பட்டு வரும் அஞ்சல் நிலையத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இன்று அதிகாலை ஊழியர்கள் யாரும் இல்லாத தனிமையை பயன்படுத்தி, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் சிலர், 17 பண மூட்டைகளை திருடிச் சென்றுள்ளனர்.

இரவு நேர பாதுகாவலர்கள் இதைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Robbery at a post office in Delhi's Anand Vihar in early morning hours, 17 cash bags looted; amount not ascertained yet.

அடுத்த செய்தி