ஆப்நகரம்

பெங்களூரு சிறை அருகே வன்முறை செய்ய ரவுடிகளை செட் செய்த சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி சிறையில் சரணடைய சென்றபோது, வன்முறை ஏற்படுத்த ரவுடிகளை சசிகலா தரப்பு ஏற்பாடு செய்ததாக தகவல் தெரிவிக்கின்றது.

TNN 20 Feb 2017, 4:36 pm
பெங்களூரு : சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி சிறையில் சரணடைய சென்றபோது, வன்முறை ஏற்படுத்த ரவுடிகளை சசிகலா தரப்பு ஏற்பாடு செய்ததாக தகவல் தெரிவிக்கின்றது.
Samayam Tamil rowdy hired create violence as sasikala entered bengaluru jail premises
பெங்களூரு சிறை அருகே வன்முறை செய்ய ரவுடிகளை செட் செய்த சசிகலா!


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்பளித்தது.

இதையடுத்து கடந்த 15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள கூடுதல் உரிமையியல் கோர்ட்டில் ஆஜராக சசிகலா, இளவரசி ஆகியோர் காரில் வந்தார். பெங்களுரூ சிறை வளாகத்திற்கு முன்பு கூடியிருந்தவர்கள் மிகவும் அமைதியாக இருந்த நிலையில், திடீரென அங்கு வன்முறை ஏற்பட்டது. அதை சமாளிக்க போலீஸாரால் தடியடியும் நடத்தப்பட்டது.



ரவுடி செட்டப்:
சசிகலாவின் கார் சிறைவளாகத்தை அடைந்த பின், அதன் பின்பு வந்த சசிகலாவின் மற்ற கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காட்டும் வாகையில், அங்கு வன்முறையை தூண்டுவதற்காக அத்திபேலேவிலிருந்து சில ரவுடிகளுக்கு பணம் கொடுத்து செட்டப் செய்யப்பட்டதாக தெரிகிறது.



வன்முறையில் ஈடுபட்ட அந்த ரவுடிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஓபிஎஸ் காரணமா?
முதலில் இந்த வன்முறைக்கு ஓபிஎஸ் தரப்பு காரணம் என போலீஸார் விசாரணை நடத்தியதாகவும், ஆனால் அதில் ஓபிஎஸ் காரணம் இல்லை என தெரியவந்துள்ளது.



சசிகலாவுக்கு ஆபத்தா?

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு ஆபத்து என்ற நிலை உள்ளது என்பதை போன்ற தோரனை உருவாக்குவதற்காக இந்த ரவுடி செட்டப் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தமிழக சிறைக்கு சசிகலா முறையீடு செய்யும் நோக்கில் இந்த செய்கையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

அடுத்த செய்தி