ஆப்நகரம்

ட்ராக் மாறிய பயணிகள் ரயில்; கையால் இழுத்து வந்த ஊழியர்கள்; பரிசு மழை பொழிந்த நிர்வாகம்!

பாதை மாறிய ரயிலை, பிளாட்பாரத்திற்கு இழுத்து வந்த ஊழியர்களுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 22 Oct 2017, 1:21 pm
மும்பை: பாதை மாறிய ரயிலை, பிளாட்பாரத்திற்கு இழுத்து வந்த ஊழியர்களுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil rs 10000 award for railway staff who pushed train manually
ட்ராக் மாறிய பயணிகள் ரயில்; கையால் இழுத்து வந்த ஊழியர்கள்; பரிசு மழை பொழிந்த நிர்வாகம்!


கடந்த 20ஆம் தேதி, மும்பை சென்ட்ரல் - லக்னோ சுவிதா விரைவு ரயில் 2வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது. 16 பெட்டிகள் கொண்ட ரயில், காலை 7.45 மணிக்கு புறப்பட தயாரானது. சிக்னலில் சிவப்பு விளக்கு இருந்த நிலையில், பச்சை விளக்கிற்காக ரயில் காத்திருந்தது.

இந்நிலையில் சிக்னல் கிடைக்கும் முன்பே, ரயில் இன்ஜினை ஓட்டுநர் இயக்கியுள்ளார். இதனால் ரயில் டிராக் சரியாக நிர்ணயிக்கப்படாத சூழலில், மாற்றுப் பாதையில் ரயில் சென்றது. அது டெட் எண்ட் எனப்படும் பாதியில் நிறைவடையும் பாதையாகும். உடனடியாக ரயிலை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து ரயிலை மீண்டும் பிளாட்பாரத்திற்குள் கொண்டு வர இயலவில்லை. ரயிலின் பின்புறம் இன்ஜின் இல்லாததால், செய்வதறியாது திகைத்தனர். உடனடியாக பயணிகள் இறக்கி விடப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ரயில்வே ஊழியர்களும், கூலித் தொழிலாளிகளும் ரயிலை பின்புறமாக தள்ளினர்.

விடாமுயற்சியால் ரயிலைத் தொடர்ந்து கைகளால் தள்ளி, பிளாட்பாரத்திற்குள் கொண்டு வந்தனர். முதல் முறையாக நடைபெற்ற இச்சம்பவம், அனைவரையும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

இந்த சூழலில் ரயிலை தள்ளிய ஊழியர்களுக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும் என்று மும்பை மண்டல ரயில்வே மேலாளர் முகுல் ஜெயின் அறிவித்துள்ளார்.

Rs 10,000 award for railway staff who pushed train manually.

அடுத்த செய்தி