ஆப்நகரம்

பணமதிப்பு நீக்கம்..கைப்பற்றியது 13 ஆயிரம் கோடி..இழப்பு ரூ.2.25 லட்சம் கோடி: ப.சிதம்பரம்!

வெறும் 13 ஆயிரம் கோடியை கைப்பற்றத்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Samayam Tamil 29 Aug 2018, 4:36 pm
வெறும் 13 ஆயிரம் கோடியை கைப்பற்றத்தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Samayam Tamil pchi
பணமதிப்பு நீக்கம்..கைப்பற்றியது 13 ஆயிரம் கோடி..இழப்பு ரூ.2.25 லட்சம் கோடி: ப.சிதம்பரம்!


இந்திய ரிசர்வ் வங்கி பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி முடிந்துள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், 99 சதவீதம் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்த நிலையில், இப்போது கூடுதலாக 3 சதவீதம் சதவீதம் மட்டுமே வந்துள்ளது.

விநியோகிக்கப்பட்ட ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளில் ரூ.15 லட்சத்து 41 கோடி ரூபாயில், ரூ.15, 310,73கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் ரூ.10,720 கோடி பணம் வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கதில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், வெறும் 13 ஆயிரம் கோடியை கைபற்றத்தான் இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா. இதற்காக 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, தினசரி கூலி பெறும் 15 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். சிறு குறு தொழில் நிறுவனங்கள் முடங்கியதால், லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

13 ஆயிரம் கோடி ரூபாய் சிக்கியதாக கூறும் நிலையில் அதுவும் கூட நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் தற்போது இருக்கலாம் அல்லது அழிக்கப்பட்டு அழிக்கப்பட்டு இருக்கலாம். பணமதிப்பு நீக்கத்தினால் இந்திய பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்தை இழந்துள்ளது. இதனால் மட்டும் ரூ.2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது டுவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி