ஆப்நகரம்

கன்ஹையா குமார் நாக்கை துண்டித்தால் 5 லட்சம் பரிசு

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்ஹையா குமாரின் நாக்கை துண்டிக்கும் நபருக்கு 5 லட்சம் பரிசு அளிப்பதாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக இளைஞர் தலைவர் ஒருவர் கூறி இருப்பது பெரும் ச்ர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

TNN 5 Mar 2016, 2:26 pm
உத்தர பிரதேசம்: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்ஹையா குமாரின் நாக்கை துண்டிப்போருக்கு 5 லட்சம் பரிசு அளிப்பதாக பாஜக இளைஞர் அணி தலைவர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil rs 5 lakh prize for cutting off kanhaiya kumars tongue says bjp youth wing leader
கன்ஹையா குமார் நாக்கை துண்டித்தால் 5 லட்சம் பரிசு


உத்தர பிரதேச மாநிலம் படவ்ன் மாவட்டத்தைச் சேர்ந்த குல்தீப் வர்ஷ்னே, பாஜக மாவட்ட இளைஞர் அணி தலைவராக இருந்து வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், 'கன்ஹையா குமார் தெடர்ந்து தேச விரோத செயலில் ஈடுப்படுவதாகவும் , தீவிரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், பாரத பிரதமர் நரேந்தர மோடிக்கு எதிராகவும் பேசி வருகிறார், எனவே அவரது பேச்சை சகிக்க முடியாமல் இந்த 'பரிசு'(நாக்கை துண்டிப்பது) வழங்கவிருப்பதாக' தெரிவித்தார்.

முன்னதாக , ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்ஹையா குமாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த புதன்கிழமை ஜாமீன் வழங்கி, வியாழக்கிழமை வடுவித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி