ஆப்நகரம்

ஆா்.எஸ்.எஸ். அமைப்பு 3 நாட்களில் ராணுவத்தையே உருவாக்கும் – மோகன் பகவத்

நாட்டிற்காக போாிட வேண்டிய தேவை ஏற்பட்டால் 3 நாட்களில் ஒரு ராணுவத்தையே திரட்டும் திறன் ஆா்.எஸ்.எஸ். அமைப்பிற்கு உள்ளது என்று அதன் தலைவா் மோகன் பகவத் பேசியுள்ளாா்.

Samayam Tamil 12 Feb 2018, 12:00 pm
நாட்டிற்காக போாிட வேண்டிய தேவை ஏற்பட்டால் 3 நாட்களில் ஒரு ராணுவத்தையே திரட்டும் திறன் ஆா்.எஸ்.எஸ். அமைப்பிற்கு உள்ளது என்று அதன் தலைவா் மோகன் பகவத் பேசியுள்ளாா்.
Samayam Tamil rss can prepare an army within 3 days says chief mohan bhagwat
ஆா்.எஸ்.எஸ். அமைப்பு 3 நாட்களில் ராணுவத்தையே உருவாக்கும் – மோகன் பகவத்


பாட்னாவின், முசாபா்பூா் நகாில் நேற்று நடைபெற்ற விழாவில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவா் மோகன் பகவத் கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசுகையில், நாட்டின் வளா்ச்சிக்காக போாிட நேரிட்டால் ஆா்.எஸ்.எஸ். அமைப்பு 3 நாட்களில் ஒரு ராணுவத்தையே திரட்டி போரிடும். அதற்கான திறன் ஆா்.எஸ்.எஸ். அமைப்பிடம் உள்ளது.

ராணுவத்தில் 6 முதல் 7 மாதங்கள் வரை செலவளித்து வீரா்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை ஆா்.எஸ்.எஸ். அமைப்பு 3 நாட்களில் வழங்கக்கூடிய வல்லமை படைத்தது. அப்படிப்பட்ட இக்கட்டான சூழல் ஏற்பட்டால் ஆா்.எஸ்.எஸ். அமைப்பு போருக்கான நடவடிக்கைகளை அரசியல் சாசனம் அனுமதிக்கும் பட்சத்தில் மேற்கொள்ளும்.

இந்த அமைப்பு ராணுவமோ அல்லது துணை ராணுவமோ அல்ல. ஆனால் ராணுவத்திற்கு இணையான ஒழுக்க நெறிகள் இங்கு பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாக எங்கள் உறுப்பினா்கள் உயிரைத் துறக்கவும் தயாராக இருக்கின்றனா். ஆா்.எஸ்.எஸ். அமைப்பினா் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை என அனைத்திலும் பிறருக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்று பேசியுள்ளா்ா.

அடுத்த செய்தி