ஆப்நகரம்

ஆர்எஸ்எஸ் வருமானக் கணக்கை வெளியிட வேண்டும்: திக்விஜய் சிங்

ஆர்எஸ்எஸ் அமைப்பு அதன் வருமானக் கணக்கை வெளியிடப்பட வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார்.

TNN 24 Jul 2016, 3:24 am
பனாஜி: ஆர்எஸ்எஸ் அமைப்பு அதன் வருமானக் கணக்கை வெளியிடப்பட வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil rss is an unregistered organisation says digvijay singh
ஆர்எஸ்எஸ் வருமானக் கணக்கை வெளியிட வேண்டும்: திக்விஜய் சிங்


கோவாவின் பனாஜி நகரில் காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த திக்விஜய் சிங், ஆர்எஸ்எஸ் பதிவுசெய்யப்படதா அமைப்பு என்றும் அதன் மாதந்திர மற்றும் ஆண்டு வருமான கணக்கு வெளியிடப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு குருதட்சணை என்ற பெயரில் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது, அந்த தொகை எங்கு செல்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர் உடனடியாக ஆர்எஸ்எஸ் இதுகுறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என்றார். குறிப்பாக குரு பூர்ணிமாவிற்காக அளிக்கப்படும் நன்கொடைகள் பற்றிய கணக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

குஜராத்தின் உனா நகரில் பசுவைக் கொன்று அதன் தோலை உரித்ததாக கூறி, தலித் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், உனா தாக்குதலில் ஈடுபட்டவர்களும் பதிவுசெய்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களுக்கு மற்றொருவரை தாக்கும் உரிமையை யார் அளித்தது என்று கேள்வி எழுப்பினார்.

அடுத்த செய்தி