ஆப்நகரம்

ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

''மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்எஸ்எஸ்தான் பொறுப்பு என்று கூறிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும் அல்லது அவதூறு வழக்கை சந்திக்க வேண்டும்'' என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

TOI Contributor 19 Jul 2016, 2:21 pm
''மகாத்மா காந்தி கொலைக்கு ஆர்எஸ்எஸ்தான் பொறுப்பு என்று கூறிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும் அல்லது அவதூறு வழக்கை சந்திக்க வேண்டும்'' என்று உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
Samayam Tamil rss killed gandhi express regret or face trial supreme court tells rahul gandhi
ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்


இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ''ஒட்டு மொத்தமாக இந்த அமைப்பில் இருக்கும் அனைவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அப்படி அனைவரையும் குற்றம்சாட்டி விட முடியாது. இந்தக் குற்றச்சாட்டு விசாரணைக்கு உட்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க முன் வரவில்லை என்றால், வழக்கை சந்திக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளது.

மேலும், இரண்டு வாரங்களுக்குள் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்று ராகுல் காந்திக்கு வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எப். நரிமன் கெடு விதித்து வழக்கை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

கடந்த 2014ல், தானேவில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ''காந்திஜியை கொன்றது ஆர்எஸ்எஸ் தான். தற்போது அவர் குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேசி வருகின்றனர். சர்தார் பட்டேலையும், காந்தியையும் எதிர்த்தவர்கள்தான் இவர்கள்'' என்று தெரிவித்து இருந்தனர். இதைக் கண்டித்து இவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த 2015ல் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்து இருந்தார்.

அடுத்த செய்தி