ஆப்நகரம்

உத்தரப் பிரதேசத்தில் வீக்கான பாஜக.. ஆர்.எஸ்.எஸ். போட்ட புது பிளான்!

பாஜகவுக்காக உத்தரப் பிரதேசத்தில் பிரச்சாரக் களத்தில் இறங்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்.

Samayam Tamil 21 Jan 2022, 10:34 pm
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எனினும், பாஜகவில் இருந்து பல்வேறு பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் சமாஜ்வாதி கட்சிக்கு தாவியுள்ளது பாஜகவை வலுவிழக்கச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil Yogi - Mogan Bhagwat


குறிப்பாக முன்னேறிய சாதி தலைவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட தலைவர்களுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறுகின்றனர். இதனால் பாஜகவின் வெற்றி வாய்ப்பு பறிபோகுமோ என ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அச்சம் எழுந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக உத்தரப் பிரதேசத்தில் தீவிர பிரச்சாரம் செய்ய ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஆர்.எஸ்.எஸ். நேரடியாக தொண்டர்கள் மூலமாகவும், தனது முன்னணி அமைப்புகளை வைத்தும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளது.

பட்ஜெட் 2022: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அரசு அழைப்பு
இதற்காக உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் வைத்து ஆர்.எஸ்.எஸ். ஒரு பிரச்சாரத் திட்டத்தை வகுத்துள்ளது. அயோத்தி முதல் காசி வரை பாஜகவின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து உத்தரப் பிரதேசத்தில் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யவுள்ளது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.

மேலும், இந்துத்வாவை வலுவிழக்கச் செய்ய எதிர்க்கட்சிகள் எடுக்கும் முயற்சிகள் குறித்தும் பரப்புரை செய்யவுள்ளனர். கோயில்கள், மதம் சார்ந்த தலங்களை பெருமைப்படுத்த பிரதமர் மோடியும், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மேற்கொண்ட முயற்சிகள் அடங்கிய புத்தகமும் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அடுத்த செய்தி