ஆப்நகரம்

இந்தியாவில் 130 கோடி இந்துக்கள் உள்ளனர்: அதிர வைத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்

இந்தியாவில் 130 கோடி இந்துக்கள் உள்ளனர் என்று அதிர வைத்துள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்.

Samayam Tamil 26 Dec 2019, 12:30 pm
இந்தியாவின் சுதந்திர வரலாற்றில் காங்கிரசுக்கு இருக்கும் பங்கு அளப்பரியது. ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவில் இந்து தேசியவாதம் மற்றும் மதச்சார்பின்மை என்னும் இருபெரும் கருத்தியல்களுக்கு இடையில்தான் இந்தியா என்னும் சுதந்திரக் குழந்தை நடந்து பழகத் தொடங்கியிருந்தது.
Samayam Tamil MOHAN-BHAGWAT


அன்று பிறந்த இந்தியா இன்று வரையிலும் புதிது புதிதாகப் பல மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவை அகண்ட பாரதமாக்க்கும் முயற்சியில் ஆக்ரோஷமாக இறங்கியிருக்கிறது பாஜக அரசு என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா ஒரு அகண்ட இந்து ராஷ்ட்ரமாக இருக்க வேண்டும் என்னும் தன் மூல சித்தாந்தத்தை நிறைவேற்றும் பணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ஜ.க செயல்பட்டு வருவதாக சொல்லப்படும் இந்த வேளையில், இந்தியாவின் மக்கள் தொகையான சுமர் 130 கோடியும் இந்துக்கள்தான் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.


அதெப்படி 130 கோடி பேரும் இந்து சமூகம் என்று சொல்வது? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால், “அவரவர் அவர்களை என்னவாகவும் கருதிக்கொள்ளட்டும். ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு அவர்களை இந்துவாகவே கருதும்” என்று தெளிவுபடக் கூறியுள்ளார் மோகன் பாகவத்.

தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார். ஏற்கனவே என்.ஆர்.சி, சி.ஏ.ஏ என மத அடிப்படையிலான முயற்சிகளின் மூலம் வெளிப்படையான மதவாத அரசியலை பாஜக நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இவை எதுவும் மதச்சார்புள்ளவை அல்ல என்று பாஜக மறுத்தும் வருகிறது. இந்நிலையில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தலைவர் இப்படி தெரிவித்திருப்பது பொதுவெளியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி