ஆப்நகரம்

கேரளாவில் ரத்தக்களறி: ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகொலை

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொண்டரான ஆனந்தன் என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.

TNN 12 Nov 2017, 4:35 pm
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தொண்டரான ஆனந்தன் என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.
Samayam Tamil rss worker stabbed to death in kerala in suspected revenge attack
கேரளாவில் ரத்தக்களறி: ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகொலை


கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூரில் ஆனந்தன் என்ற இளைஞர் மர்ம நபர்களால் இன்று படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு வயது 26. முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

போலீசாரில் விசாரணையில் அவர் ஆர்எஸ்எஸ் இயக்க பிரமுகர் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து கேரளா மாநில அரசைக் கண்டித்து பாஜகவினர் கடும் தாக்கதலைத் தொடுத்து வருகின்றனர்.

இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கொலையைச் செய்தவர்கள் தப்பிச்சென்ற காரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் கன்னூரில் தொடர்ந்து இதுபோன்ற படுகொலைகள் நடந்து வருகின்றன. கடந்த 2000 முதல் 2016 வரை இங்கு 69 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி