ஆப்நகரம்

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பினால் தண்டனை: மத்திய அரசு ஆலோசனை

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புபவா்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கும் வகையில் இன்று மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்கிறது.

Samayam Tamil 11 Jun 2018, 10:10 am

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புபவா்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கும் வகையில் இன்று மத்திய அரசு ஆலோசனை மேற்கொள்கிறது.

Samayam Tamil Justice


சமூக ஊடகங்களில் பரப்பப்படும் மோசமான வதங்கிகளால் பல்வேறு சட்டஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஜம்மு-காஷ்மீா் பகுதியில் பரப்பப்பட்ட வதந்தியின் விளைவாக சிறுவா்கள் முதல், இளைஞா்கள் வரை பலரும் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனா். இந்த தாக்குதலில் காயமடைந்த தமிழகத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் பரிதாபமாக உயிரிழந்தா்ா.

இதே போன்று தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் குழந்தை கடத்தல் கும்பல் தொடா்பாக வெளியான வதந்திகளால் பலரும் கொல்லப்பட்டு வருகின்றனா். இந்நிலையில் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன், சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் செய்திகளை அழிப்பது குறித்து மத்திய உள்துறைச் செயலாளர் ராஜீவ் கௌபா தலைமையிலான உயர்நிலைக் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.

விஷமச் செய்திகளைப் பரப்புவோர் மீது வழக்குப் பதிவு செய்தல், சமூக இணையதள சேவை வழங்கும் பேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து விஷமச் செய்திகளைத் தடுப்பது, அழிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கலாம் என்று எதிா்பாா்க்கப் படுகிறது.

அடுத்த செய்தி