ஆப்நகரம்

மம்தா-மோடி மோதல்; அச்சுறுத்தப்படும் சாமானியர்கள்

திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் அடிக்கடி மேற்கு வங்க கிராமபுறங்களில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Samayam Tamil 10 Jun 2019, 11:25 am
திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் அடிக்கடி மேற்கு வங்க கிராமபுறங்களில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
Samayam Tamil mamtha banerjee2


மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கும் பிரதமருக்கு தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு இருந்தாலும் அரசியலிலும் கொள்கையிலும் தீவிர எதிரிகளாகவே இருக்கின்றனர்.

மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிர முனைப்போடு இருக்கிறது. பல தலைமுறைகளாக அங்கு இருந்துவந்த கம்யூனிஸ தாக்கதை மம்தா தகர்த்து எறிந்தார்.

ஆனால் தற்போது அங்கு புகும் இந்துத்துவாவை விரட்டியடிக்க அவர் கடும் போர் புரிய வேண்டியுள்ளது. கடந்த ஆண்டு சாரதா சிட் பண்ட் விவகாரத்தில் மம்தா தர்ணாவில் இறங்கியதில் இருந்தே பாஜகவுக்கும் மம்தாவுக்கு கடும் வார்த்தைப் போர் நிலவி வருகிறது. இந்நிலையில் மம்தா முன்னர் வேண்டுமென்றே பல பாஜக தொண்டர்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பி அவரை கடுப்பேற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

தற்போது இந்த இரு கட்சித் தொண்டர்களில் கலவரம் கிராம புறங்களில் அதிகமாக உள்ளது. மேலும் அங்கு வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர பயம் கொள்கின்றனர். அரசியல் சண்டைக்காக பொதுமக்களை அச்சுறுத்தும் இந்த இரு கட்சிகளுக்கு, இணையத்தில் கடும் கண்டனங்கள் பறக்கின்றன. இது குறித்து மூத்த தலைவர்களான மோடியும் மம்தாவும் சிந்திப்பார்களா?

அடுத்த செய்தி