ஆப்நகரம்

சபரிமலை நடைதிறப்பு: ஐய்யப பக்தர்கள் இத கொண்டு போக மறந்துடாதீங்க!

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. சபரிமலையில் பக்தர்கள் நாளை முதல் தரிசனம் செய்யலாம்

Samayam Tamil 15 Nov 2020, 11:08 pm
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக மூடப்பட்ட கோயில்கள் உள்பட மத வழிபாட்டு தலங்களை அடுத்தடுத்து அளிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில், கடந்த ஜூன் 8ஆம் தேதி முதல் திறந்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் தரிசனத்துக்கு மதவழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அந்த வகையில், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி சபரிமலையில் பக்தர்கள் நாளை முதல் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி முதல் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

அதேசமயம், வார இறுதி நாட்களில் மேலும் ஆயிரம் பேர் என மொத்தம் 2,000 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மண்டல பூஜை நடைபெறும் டிசம்பர் 26ஆம் தேதி மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும் ஜனவரி 14ஆம் தேதியன்று 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வரும் ஸ்புட்னிக் தடுப்பு மருந்து: சோதனைக்கு 180 தன்னார்வலர்கள் ரெடி!

சன்னதிக்கு வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ள தேவசம்போர்டு, தரிசனத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை பக்தர்கள் சமர்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொரோனா இல்லை என்னும் மருத்துவ சான்றிதழோடு வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்றும் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி