ஆப்நகரம்

சபரிமலை பக்தர்களுக்கு புதுசு.. இனி கூகுள் பே மூலம் காணிக்கை செலுத்தலாம்!

சபரிமலை பக்தர்கள் இனி கூகுள் பே மூலம் காணிக்கை செலுத்தலாம்.

Samayam Tamil 2 Dec 2021, 6:59 pm
சபரிமலை அய்யப்பனுக்கு கூகுள் பே மூலம் காணிக்கை செலுத்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்லா பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மயமாகி வரும் காலகட்டத்தில், கடவுளுக்கு காணிக்கை செலுத்துவதையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் கூகுள் பே மூலம் காணிக்கை செலுத்தும் திட்டம் சபரிமலை அய்யப்பன் கோயிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil sabarimala


இதன்படி, கூகுள் பே மூலம் பணம் செலுத்துவதற்கான QR Code அய்யப்பன் கோயிலைச் சுற்றி 22 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் அனைவரும் இந்த Codeஐ ஸ்கேன் செய்து விருப்பமான தொகையை காணிக்கையாக செலுத்தலாம்.

இதுமட்டுமல்லாமல் 9495999919 என்ற எண் மூலமாகவும் கூகுள் பே வழியாக காணிக்கை செலுத்தலாம். இதுமட்டுமல்லாமல் இன்னும் கூடுதல் இடங்களில் QR code வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சபரிமலை கோயில் தலைமை அதிகாரி கிரிஷ்ணகுமார் வாரியர் தெரிவித்துள்ளார்.

அரை நிர்வாணமாக.. அதுவும் உயர் நீதிமன்றத்தில்.. செம கடுப்பான நீதிபதிகள்!
கொரோனா கட்டுப்பாடுகளால் கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் காணிக்கை பெறுவதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்தர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி கேரள அரசிடம் திருவாங்கூர் தேவசம் போர்டு வலியுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி