ஆப்நகரம்

மகர விளக்கு பூஜைக்கு தயாராகும் சபரிமலை!

மகர விளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ள சந்தனத்திலான பெட்டகங்கள் பந்தளம் அரண்மனையில் இருந்து சன்னிதானம் நோக்கி புறப்பட்டது.

Samayam Tamil 14 Jan 2020, 1:00 pm
மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவி்ல் நடை கடந்த 30ஆம் தேதி திறக்கப்பட்டது. தினசரி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்று வருகிறது.
Samayam Tamil மகர விளக்கு பூஜை


விழாவின் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனம் 15ஆம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. மகரவிளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் வைக்கப்பட்டுள்ள சந்தனத்திலான பெட்டகங்கள் பந்தளம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த திருவாபரணங்கள் ஆரன்முளா துணை கமிஷனர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புடன் சபரிமலைக்கு ஊர்வலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலம் சாமி ஐயப்பனின் பாரம்பரிய பெரு வழிப்பாதையான எருமேலி, களைகட்டி, முக்குழி, கரிமலை வழியாக நடை பயணமாக 15ஆம் தேதி மதியம் பம்பை சென்றடையும்.

நாகப்பட்டினம்: இந்த ஆண்டு திருக்கடையூர் ரேக்ளா ரேஸுக்குத் தடை

அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும். சன்னிதானத்தில், திருவாபரண பெட்டிகளுக்கு, திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் 18ஆம் படிக்கு கீழ் பகுதியில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும்.

அதை தொடர்ந்து, பதினெட்டாம் படி வழியாக சன்னிதானம் கொண்டு செல்லப்படும் திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தீபாராதனைக்குப்பின் பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் 3 முறை பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளிப்பார், பிரகாசமான ஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

உலக அதிசயமான படேல் சிலை! ஷாங்காய் தலைவருக்கு ஜெய்சங்கர் நன்றி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய மகர சங்கரம பூஜை 15-ந் தேதி அதிகாலை 2.50 மணிக்கு நடைபெறும். அப்போது திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து கன்னி ஐயப்பன்மார்கள் புடைசூழ கொண்டு வரப்படும் நெய் மூலம் ஐயப்பனுக்கு அபிஷேகம் நடைபெறும்.

மகர விளக்கு பூஜை நடைபெறுவதை முன்னிட்டு, ஆபரணப் பெட்டிகள் எடுத்துவர வசதியாக, அன்றைய தினம் பகல் 1 மணி முதல் மாலை 6.30 மணி வரை பம்பையில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே போல் மாலை 6 மணி முதல் 7 மணி வரை பதினெட்டாம் படி வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும்.

மேலும் ஐயப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நிறைவடைந்த பின் இரவு 7 மணிக்கு பிறகு பக்தர்கள் படியேற அனுமதிக்கப்படுவார்கள்.

மக்களை தவறான பாதையில் வழிநடத்தும் மோடி, அமித்ஷா: சோனியா சாடல்

மகர விளக்கு பூஜையையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக புல்மேடு உட்பட ஜோதி தரிசனம் காணும் இடங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதிகளில் கூடுதல் விளக்குகள் போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல் பம்பை மலை முகடில் இருந்து பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்ய எல்லா வசதிகளும் செய்யப்படும்.

திருவாபரணங்கள் கொண்டுவரப்படும் வழிகளில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க நூற்றுக்கணக்கான போலீசார் பத்தனம்திட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி