ஆப்நகரம்

சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி, இந்த சான்று அவசியம்!

கொரோனா காலம் என்பதால் பக்தர்கள் வரத் தடை செய்யப்பட்டிருந்த சூழலில், சபரிமலையில் சில கட்டுப்பாடுகளுடன் நடை திறக்கப்படுகிறது...

Samayam Tamil 11 Aug 2020, 9:16 am
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பக்தர்கள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே வேளை, கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டு, அந்த சான்றிதழைக் கொண்டு வரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Samayam Tamil சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி, இந்த சான்று அவசியம்!
சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி, இந்த சான்று அவசியம்!


கொரோனா ஊரடங்கு காரணமாகச் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், தமிழ் மாத தொடக்கத்தில் நடத்தப்படும் பூசைகள் மட்டும் தடையின்றி தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்து தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்திற்குப் பின் அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் 743 பேருக்கு கொரோனா!

அந்த அறிக்கையில், “சபரிமலையில் ஒரு நிபந்தனையோடு பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, சம்பந்தப்பட்ட நபர் தனக்கு கொரோனா இல்லை, என்பதை உறுதி செய்யும் பரிசோதனை மேற்கொண்டு, அந்த சான்றோடு வந்தால் நிச்சயம் அனுமதிக்கப்படுவார்கள்” எனக் கூறப்பட்டிருந்தது.

அதேபோல் இந்த ஆண்டு குறைவான எண்ணிக்கையிலே சாமி தரிசனத்திற்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற முடிவையும் தேவஸ்தானம் எடுத்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறையின் அடிப்படையில் இந்த கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி