ஆப்நகரம்

சபரிமலை வந்த பெண்கள் மீது தாக்குதல்: ராகுல் ஈஸ்வர் கைது

“நான் எந்தப் பெண்ணையும் தாக்கவில்லை. தன் மீது பழிவாங்கும் எண்ணத்தில் வழக்கு போடப்படுகிறது” என அவர் கூறியிருக்கிறார்.

Samayam Tamil 17 Oct 2018, 4:41 pm
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைவதைத் தடுத்துத் தாக்கியதாக ராகுல் ஈஸ்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil DptEGD-W0AAhd90


கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. இதனால் சபரிமலை அருகே உள்ள நிலக்கலில் வலுவான போராட்டம் நடக்கிறது. கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து மறியல் நடைபெறுகிறது.

இந்நிலையில், பம்பையில் நடந்த போராட்டத்தில் முன்னணி வகித்த ராகுல் ஈஸ்வர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயிலுக்குள் செல்ல வரும் பெண்களைத் தடுத்து நிறுத்துவதற்காக நின்றிருந்த அவரைப் போலீசார் கைது செய்துள்ளதாக அவரது மனைவி தீபா விஜயன் தெரிவித்துள்ளார்.
கோயிலுக்கு வந்த சில இளம்பெண்களை தடுத்து தாக்கி திருப்பி அனுப்பியுள்ளார். செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை போராட்டக்காரர்கள் கடுமையாகத் தாக்கியதுடன் உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால், ராகுல் மீது ஜாமினில் வெளிவர முடியாத வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. கைதான அவர் தற்போது பம்பை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

“நான் எந்தப் பெண்ணையும் தாக்கவில்லை. தன் மீது பழிவாங்கும் எண்ணத்தில் வழக்கு போடப்படுகிறது” என அவர் கூறியிருக்கிறார்.

அடுத்த செய்தி