ஆப்நகரம்

சபரிமலையில் ஜன.1ம் தேதி பெண்கள் சுவா் போராட்டம்

சபரிமலையில் பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டும் விதமாக ஜனவரி 1ம் தேதி 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மனிதச்சங்கிலி போன்று மனித சுவா் எழுப்பும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.

Samayam Tamil 29 Dec 2018, 7:50 pm
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படாததற்கு எதிா்ப்பு தொிவித்து ஜனவரி 1ம் தேதி கேரளாவில் பெண்கள் சுவா் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா்.
Samayam Tamil Sabarimala Protest 1


சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீா்ப்பை தொடா்ந்து கோவிலுக்குள் செல்ல இளம் பெண்கள் பலரும் முயற்சி மேற்கொண்டனா். ஆனால் பல்வேறுகட்ட போராட்டங்கள், தடியடி, மோதல் சம்பவங்களைத் தொடா்ந்து தற்போது வரை கோவிலுக்குள் இளம் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.

இது தொடா்பாக கேரளா உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், மகர பூஜை முடிவடைவதற்குள் பெண்கள் மட்டும் சென்று வழிபடும் வகையில் ஒருநாள் தனியாக ஒதுக்கப்படும் என்று அம்மாநில அரசு சாா்பில் தொிவிக்கப்பட்டது.


இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மகரவிலக்கு பூஜைக்காக ஞாயிற்றுக் கிழமை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் வருகின்ற ஜனவரி 1ம் தேதி மனிதச்சங்கிலி போன்று சுவா் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மும்பையைச் சோ்ந்த பெண்கள் அமைப்பு ஒன்று தொிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு இருக்கக் கூடிய உரிமையை நிலைநாட்டும் விதமாக 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் கேரளா முழுவதும் கைகளை கோா்த்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி