ஆப்நகரம்

மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்படும் சபரிமலை நடை: பக்தர்களுக்கான முக்கிய விதிகள்!

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை வருகிற நவம்பர் மாதம் 16ஆம் தேதி திறக்கப்படுகிறது

Samayam Tamil 30 Oct 2020, 3:07 pm
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி நாடு முழுவதும் முடக்கப்பட்டது. கல்வி நிலையங்கள், கோயில்கள் உள்பட மத வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டன. வழக்கமாக பூஜைகள் கோயில்களில் நடைபெற்ற போதும், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த பொது முடக்கம் வருகிற நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர இதர பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த ஜூன் 8ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் தரிசனத்துக்கு மதவழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயில் நடை வருகிற நவம்பர் மாதம் 16ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதையொட்டி, ஐய்யப்பன் பக்தர்களுக்கான முக்கிய விதிகளை வகுத்து தேவசம்போர்டு அறிவித்துள்ளது. அதன்படி, சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி முதல் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: இலவச டோக்கன் எங்கு கிடைக்கிறது தெரியுமா?

வார இறுதி நாட்களில் மேலும் ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கின் போது 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.


சன்னதிக்கு வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ள தேவசம்போர்டு, தரிசனத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை பக்தர்கள் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஒருவேளை பிற மாநில பக்தர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் கேரளாவில் மருத்துவ சிகிச்சைக்கான உதவிகள் வழங்கப்படும். அவர்கள் தங்களது சொந்த மாநிலத்துக்கு செல்ல விரும்பினால் அதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி