ஆப்நகரம்

சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரம்

சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

TOI Contributor 12 Jul 2016, 1:10 am
சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil sabarimalai temple women allowing issue
சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரம்


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தற்போது 10 வயதிற்கும் குறைவான சிறுமிகளும், 50 வயதிற்கு அதிகமான பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதனை எதிர்த்து இளம் வழக்குரைஞர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்டு கேரள அரசிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவில் எல்லோருக்கும் பொதுவான இடம் என்றும், இங்கு வருவதை எவராலும் தடுக்க இயலாது என்று கூறினர். ஆனாலும் இந்த விஷயத்தின் தீவிரம் கருதி இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற பரிசீலித்து வருகிறோம். இதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி