ஆப்நகரம்

ஐப்பசி மாத பூஜை நிறைவு: சபரிமலை கோவில் நடை இன்று முதல் அடைப்பு!

ஐப்பசி மாத பூஜைகள் நிறைவு பெறும் நிலையில், இன்று முதல் சபரிமலை கோவில் நடை சாத்தப்படுகிறது.

Samayam Tamil 22 Oct 2018, 3:01 pm
ஐப்பசி மாத பூஜைகள் நிறைவு பெறும் நிலையில், இன்று முதல் சபரிமலை கோவில் நடை சாத்தப்படுகிறது.
Samayam Tamil sabari mala closed


சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.

பெண்கள் கோவிலுக்குள் செல்ல முடியாதபடி எதிர்ப்பாளர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனிடையே, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவரான ரெஹானா பாத்திமா என்ற பெண் பத்திரிகையாளர், கவிதா என்ற மற்றொரு பத்திரிகையாளருடன் வெள்ளிக்கிழமை சபரிமலை கோயிலுக்குள் இருமுடியுடன் செல்ல முயன்றார். போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அவர்களை எதிர்ப்பாளர்கள் கடுமையாக எதிர்த்து திருப்பி அனுப்பினர். பெரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐப்பசி மாத பூஜை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால் இன்று முதல் மீண்டும் ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது. இனி மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் தான் திறக்கப்படும். நிறைவு நாளையொட்டி, பந்தள மன்னர் குடும்பத்தினரும் ஐயப்பன் கோவிலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆறு நாட்கள் ஆகியும் இதுவரை எந்த பெண்களும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத நிலையில், இன்று கடைசி நாள் என்பதால், அதிகளவு பெண் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி