ஆப்நகரம்

எழுத்தாளர்களுக்கு பயண உதவித்தொகை: சாகித்ய அகாடமி அறிவிப்பு

இந்திய எழுத்தாளர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்திற்குச் செல்ல பயண நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என சாகித்ய அகாடமி அழைப்பு விடுத்துள்ளது.

TNN 15 Jul 2017, 6:50 pm
Sahitya akademi calls for applications from writers for travel grants
Samayam Tamil sahitya akademi calls for applications from writers for travel grants
எழுத்தாளர்களுக்கு பயண உதவித்தொகை: சாகித்ய அகாடமி அறிவிப்பு

எழுத்தாளர்களுக்கு பயண உதவித்தொகை: சாகித்ய அகாடமி அறிவிப்பு
இந்திய எழுத்தாளர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்திற்குச் செல்ல பயண நிதி உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என சாகித்ய அகாடமி அழைப்பு விடுத்துள்ளது.

சாகித்ய அகாடமி நிறுவனம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் 40 வயதுக்கு உட்பட்ட இந்திய எழுத்தாளர்கள் தங்கள் பயணத்திற்கான நிதி உதவியைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எழுத்தாளர்கள் மட்டுமின்றி பிற இந்திய மொழி எழுத்தாளர்களும் இந்த பயண நிதி உதவிக்கு விண்ணப்பத்தை அனுப்பலாம். அவர்களில் தகுதியானவர்களை சாகித்ய அகாடமியின் தலைவர் தேர்வுசெய்வார்.

எழுத்தாளர்கள் தாங்கள் செல்ல விரும்பும் பயணம் குறித்த விரிவான அறிக்கையை சாகித்ய அகாடமியின் பிராந்தி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு, தேர்வாகும் எழுத்தாளர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் பயண உதவித்தொகை அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/policies/travel_grants.jsp என்ற சாகித்ய அகாடமியின் இணைய பக்கத்திற்குச் செல்ல்லாம்.

அடுத்த செய்தி