ஆப்நகரம்

அதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்கனும்; டோல்கேட் ஊழியர்களுக்கு பயிற்சி!

சுங்கச்சாவடியில் உயர்அதிகாரிகளின் வாகனங்கள் கடக்கும் போது அவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்று டோல்பிளாசா ஊழியர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

TOI Contributor 14 Dec 2017, 11:33 am
சுங்கச்சாவடியில் உயர்அதிகாரிகளின் வாகனங்கள் கடக்கும் போது அவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்று டோல்பிளாசா ஊழியர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil salute soldiers when they pass by nhai tells toll staff
அதிகாரிகளுக்கு சல்யூட் அடிக்கனும்; டோல்கேட் ஊழியர்களுக்கு பயிற்சி!


இந்தியாவில் உள்ள நான்கு வழிச்சாலைகளில் 60 கிலோமீட்டர் தொலைவிற்கு ஒன்று என்ற கணக்கில் சுமார் மொத்தம் 386 டோல்கேட்டுகள் உள்ளன.

இந்த டோல்பிளாசாவில் கடக்கும் வாகனங்கள் சுங்கவரி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. மத்திய அரசின் ஒப்புதலோடு, தனியாரும் சில இடங்களில் இந்த கட்டணங்களை வசூலிக்கிறது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையும் இந்த டோல்பிளாசாவை கடக்கும் போது மனம் நொந்து தான் போகிறார்கள். சாலை வரியும் கட்டி, சுங்க வரியும் கட்டி வேண்டிய அவல நிலை தற்போது நிலவி வருகிறது.

எல்லாவற்றிலும் விட கொடுமை, பக்கத்து ஊருக்கு செல்வதென்றால் கூட சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதால், இந்தியாவின் பல பகுதிகளில், உள்ளூர் மக்களுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் தகராறுகள் ஏற்பட்டு வருகிறது.

இதே போல் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளும், சாலையை கடக்கும் போது, அவர்களிடம் சுங்கக்கட்டணம் கேட்கும் போது சுங்க ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. என்னிடமே கட்டணம் கேட்குறாயா என்ற ஆத்திரத்தில் தான், இது போன்ற நிகழ்வுகள் நடக்குகின்றன.

இந்நிலையில், ஆயுதம் தாங்கிய காவல்துறை உயர்அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் கடக்கும் போது அவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்றும் அவர்களுடைய அடையாள அட்டையை டோல்கேட்டில் உள்ள மூத்த அதிகாரிகள் தான் சோதனையிட வேண்டும் என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இது போன்ற அதிகாரிகளின் அடையா அட்டையை கீழ் நிலையிலுள்ள ஊழியர்கள் சோதனையிட கூடாது என்றும், அவர்கள் கடக்கும் போது சுங்கச்சாவடியில் உள்ள ஊழியர்கள் எழுந்துநின்று சல்யூட் அடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த செய்தி