ஆப்நகரம்

6 மாதங்களுக்கு முன்பே, கேரள பேரழிவை எச்சரித்த ’சமத்வம்’ குறும்படம்!

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு குறித்து குறும்படம் ஒன்று முன்னரே எச்சரித்துள்ளது.

Samayam Tamil 12 Sep 2018, 12:34 pm
கொச்சின்: கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு குறித்து குறும்படம் ஒன்று முன்னரே எச்சரித்துள்ளது.
Samayam Tamil Kerala Floods


கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி, பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்தன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய ஒட்டுமொத்த இந்தியாவும் கரம் நீட்டின. இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு, ‘சமத்வம்’ என்ற குறும்படத்தை கேரளாவைச் சேர்ந்த அனில் நாயர் எடுத்திருந்தார்.

அதில் பெருவெள்ளத்தால் தத்தளிக்கும் மக்களின் நிலை தெளிவாக படம் பிடித்துக் காட்டப்பட்டது. உறவுகளை இழந்து தவிக்கும் பெற்றோர், பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள் என கண்ணீர் காட்சிகளாய் விரிகின்றன.

எங்கு பார்த்தாலும் வெள்ள நீர், நிலச்சரிவு என தாங்க முடியாத ரணமாக கதை சொல்லப்பட்டிருக்கிறது. அவர்களை மீட்க மீட்பு குழுவினர் படும் சிரமங்கள், சாகசங்கள் என தற்போது நடந்த நிகழ்வுகளை முன்னரே இந்த குறும்படம் எச்சரித்துள்ளது.

இதனை முக்கியமானதாக கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பொதுமக்களை பத்திரமாக மீட்டிருக்கலாம் என்கின்றனர்.

Samathwam short film warns about Kerala disaster few months back.

அடுத்த செய்தி