சிங்கப்பூரில் இருந்து இன்று காலை சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் சாம்சங் நோட் 2 செல்போன் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சாம்சங் நிறுவன அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து இன்று காலை சென்னைக்கு இண்டிகோ விமானம் வந்து கொண்டு இருந்தது. இறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு விமானத்தின் 23 c இருக்கைக்கு மேல் இருக்கும் சரக்கு பெட்டகம் ஒன்றில் இருந்து புகை வந்தது. இதை கவனித்த பயணிகள் உடனடியாக விமானப் பணியாளர்களை எச்சரித்தனர். உடனடியாக அந்த இருக்கையில் இருந்த பயணிகளை வேறு இருக்கைக்கு மாற்றிவிட்டு, தீயணைப்புக் கருவியால் தீயை விமானப் பணியாளர்கள் அணைத்தனர். பின்னர் நீர் நிரப்பிய கொள்கலன் ஒன்றில் செல்போனை வைத்து கழிப்பறைக்கு எடுத்து சென்றனர்.
இதுகுறித்து இந்திய விமானப் போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் கூறுகையில், ''நாங்கள் ஏற்கனவே சாம்சங் நோட் 2 செல்போனை எடுத்து வர வேண்டாம் அல்லது விமானத்திற்குள் ஆஃப் செய்து வையுங்கள் என்று கூறியுள்ளோம். இருந்தும் இந்த சம்பவம் நடந்துள்ளது'' என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த விஷயத்தில் சாம்சங் அதிகாரிகளுக்கு இந்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் சம்மன் அனுப்பி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தை இண்டிகோ விமானம் உறுதி செய்துள்ளது. இன்று காலை இந்த சம்பவம் நடந்ததாகவும், இதையடுத்து, விமான ஓட்டி, விமான நிலைய அதிகாரிகளை எச்சரித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
A Samsung Note 2 phone emitted smoke after reportedly catching fire on a Singapore-Chennai flight of IndiGo on Friday morning when the plane was about to land.
சிங்கப்பூரில் இருந்து இன்று காலை சென்னைக்கு இண்டிகோ விமானம் வந்து கொண்டு இருந்தது. இறங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு விமானத்தின் 23 c இருக்கைக்கு மேல் இருக்கும் சரக்கு பெட்டகம் ஒன்றில் இருந்து புகை வந்தது. இதை கவனித்த பயணிகள் உடனடியாக விமானப் பணியாளர்களை எச்சரித்தனர். உடனடியாக அந்த இருக்கையில் இருந்த பயணிகளை வேறு இருக்கைக்கு மாற்றிவிட்டு, தீயணைப்புக் கருவியால் தீயை விமானப் பணியாளர்கள் அணைத்தனர். பின்னர் நீர் நிரப்பிய கொள்கலன் ஒன்றில் செல்போனை வைத்து கழிப்பறைக்கு எடுத்து சென்றனர்.
இதுகுறித்து இந்திய விமானப் போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் கூறுகையில், ''நாங்கள் ஏற்கனவே சாம்சங் நோட் 2 செல்போனை எடுத்து வர வேண்டாம் அல்லது விமானத்திற்குள் ஆஃப் செய்து வையுங்கள் என்று கூறியுள்ளோம். இருந்தும் இந்த சம்பவம் நடந்துள்ளது'' என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த விஷயத்தில் சாம்சங் அதிகாரிகளுக்கு இந்திய விமானப் போக்குவரத்து இயக்குனரகம் சம்மன் அனுப்பி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தை இண்டிகோ விமானம் உறுதி செய்துள்ளது. இன்று காலை இந்த சம்பவம் நடந்ததாகவும், இதையடுத்து, விமான ஓட்டி, விமான நிலைய அதிகாரிகளை எச்சரித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
A Samsung Note 2 phone emitted smoke after reportedly catching fire on a Singapore-Chennai flight of IndiGo on Friday morning when the plane was about to land.