ஆப்நகரம்

நண்பர்கள் தினத்தில் இந்திய - சீன உறவில் அமைதியை விரும்பும் மணல்சிற்பம்...!

நண்பர்கள் தினத்தை ஒட்டி, இந்திய-சீன உறவில் நல்லிணக்கத்தை நாடும் மணல் சிற்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

TNN 6 Aug 2017, 9:05 am
பூரி: நண்பர்கள் தினத்தை ஒட்டி, இந்திய-சீன உறவில் நல்லிணக்கத்தை நாடும் மணல் சிற்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil sandart at puribeach to wish india and china relation
நண்பர்கள் தினத்தில் இந்திய - சீன உறவில் அமைதியை விரும்பும் மணல்சிற்பம்...!


உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ரத்த சம்பந்தம் இல்லை என்றாலும், காலந்தோறும் நம்மை ஒன்றிணைத்து வைத்திருப்பது நட்பு.

நட்பிற்காக தங்கள் வாழ்வையே விட்டு கொடுத்த ஏராளமான கதைகளைக் கேட்டிருப்போம். உறவுகள் வேண்டாம்; எனக்கு நட்பு மட்டும் போதும்; என்று கூறும் நண்பர்கள் நட்பை காலந்தோறும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தகைய நன்னாளில் நட்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஒன்றுபடுவோம்; கொண்டாடுவோம். இந்நிலையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

அதில் இந்திய - சீன தேசியக் கொடிகளுடன், இனிய நண்பர்கள் தினத்தில் அமைதி வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய - சீனா இடையே எல்லைப் பிரச்சனை நீண்ட காலமாகவே தொடர்ந்து வருகிறது.

My SandArt at #Puribeach toWish India and China, bring #peace in their relationship.Happy #FriendshipDay. pic.twitter.com/NyIBMpIlqv— Sudarsan Pattnaik (@sudarsansand) August 6, 2017 சமீப காலமாக இந்த பிரச்சனை சூடுபிடித்துள்ளது. அதனால் இந்த நல்ல நாளில் இருநாடுகளிடையே அமைதி நிலவ வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

SandArt at #Puribeach to Wish India and China, bring #peace in their relationship.

அடுத்த செய்தி