ஆப்நகரம்

சுவாமி சந்தீபானந்தா கிரி ஆசிரமத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குஆதரவளித்த சுவாமி சந்தீபானாந்தா கிரியை மிரட்டும் நோக்கில், இன்று அதிகாலை அவரது ஆசரமத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

Samayam Tamil 27 Oct 2018, 2:10 pm
சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குஆதரவளித்த சுவாமி சந்தீபானாந்தாகிரியை மிரட்டும் நோக்கில், இன்று அதிகாலை அவரதுஆசரமத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
Samayam Tamil nntomdq8_kerala-school-of-bhagavad-gita-attack-twitter_625x300_27_October_18


திருவனந்தபுரம் புறநகர் பகுதியில் உள்ளது சந்தீபானந்தா கிரியின் ஆசரமம். இன்று அதிகாலை 2. 30 மணியளவில் ஆசிரமத்திற்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆசிரமத்திற்கு தீவைத்து விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். மேலும் ஆசிரமத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்ட மாருதிசுசுகி ஆம்னிமற்றும் இருசக்கர வாகனத்திற்கு தீவைத்தும் கொளுத்தி உள்ளனர்.

சபரிமலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றதீர்ப்புக்கு ஆதரவாக சுவாமி சந்தீபானாந்தா கிரி கருத்து தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவரது ஆசிரமத்திற்குமர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

இந்நிலையில் கேரள முதல்வர் பினரயி விஜயன் இன்று காலை ஆசிரமத்தை பார்வையிட்டார். அபோது பேசிய அவர்‘ இதுபோன்ற மிரட்டல்கள் கண்டிக்கத்தக்கது.சட்டத்தையாரும் கையில் எடுப்பதை கேரள அரசு ஒருபோதும் அனுமதிக்காது. கருத்துச் சுதந்திரம் அனைருக்கும் இருக்கிறது’’ என்று கூறினார்

கேரள மாநிலத்தின் நிதியமைச்சர்தாமஸ் ஐசக் கூறியதாவதுசந்தீபானாந்தாகிரியை மிரட்டும் நோகத்தில்தான் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.சாமி சந்தீபானாந்தாகிரி மற்றும் மற்றவர்கள் இந்த ஆசிரமத்தில் இருந்த நேரத்தில்தான் தீ வைக்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் வந்ததால் அனைவரின் உயிரும்காப்பற்றப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக திருவனந்தபுரம்காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி