ஆப்நகரம்

பாகிஸ்தானில் இறந்த கிரிபால் உடல் உறுப்புகள் மாயம்

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டு இறந்த கிரிபால் சிங்கின் முக்கிய உடல் உறுப்புகள் காணாமல் போனது தற்போது தெரிய வந்துள்ளது.

TOI Contributor 20 Apr 2016, 3:49 pm
பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டு இறந்த கிரிபால் சிங்கின் முக்கிய உடல் உறுப்புகள் காணாமல் போனது தற்போது தெரிய வந்துள்ளது.
Samayam Tamil sarabjit redux pak sends kirpal singhs body with organs like heart and liver missing
பாகிஸ்தானில் இறந்த கிரிபால் உடல் உறுப்புகள் மாயம்


பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 11ஆம் தேதி மர்ம முறையில் இறந்தவர் கிரிபால் சிங். கடந்த 2013ல் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்தவர் சரப்ஜித் சிங். பாகிஸ்தானில் லாகூரில் கோட் லோக்பட் சிறையில் இவரது சிறைக்கு அருகில் உள்ள அறையில்தான் கிரிபால் சிங்கும் அடைக்கப்பட்டு இருந்தார்.

இவர் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி ஜின்னா மருத்துவமனையில் இறந்தார். பின்னர் இவரது உடல் இந்தியா கொண்டு வரப்பட்டது. இங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் இருதயம், கல்லீரல், கிட்னி ஆகியவை இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.

இதேபோன்றுதான் கடந்த 2013ல் இந்தியா கொண்டு வரப்பட்ட சரப்ஜித் உடலிலும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போதும் அவரது உடலில் முக்கிய உறுப்புகள் காணாமல் போனது தெரிய வந்தது.

கிரிபாலுக்கு மாரடைப்பு என்று பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், அவரை கொடுமைபடுத்தியதில் இறந்துள்ளார் என்றும் சரப்ஜித் சாவின் உண்மை கிரிபாலுக்கு தெரியும் என்பதால் சாட்சியாக இருந்த அவரையும் பாகிஸ்தான் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி