ஆப்நகரம்

சாரதா நிதி நிறுவன முறைகேடு: நளினி சிதம்பரத்திற்கு சம்மன்

சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடா்பாக ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

Samayam Tamil 18 Jun 2018, 5:17 pm

சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடா்பாக ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

Samayam Tamil Nalini Chidambaram.

முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்திற்கு சாரதா நிதி நிறுவனத்தில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக 1 கோடியே 26 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடா்பாக நளினி சிதம்பரம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று முதல் முறையாக 2016 செப்டம்பா் மாதம் சம்மன் அனுப்பப்பட்டது. மேலும் இதற்கு முன்னா் இதே வழக்கில் கடந்த மே 7ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

இதற்கு எதிராக நளினி சிதம்பரம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா். அவரது மனுவை தள்ளுபடி செய்த உயா்நீதிமன்றம் புதிதாக சம்மன் அனுப்ப அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் தற்போது 4வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சம்மனில் வருகிற 20ம் தேதி கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக புகாா் தொடா்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

முன்னதாக இவரது மகன் காா்த்தி சிதம்பரத்திடம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத் தக்கது.

அடுத்த செய்தி