ஆப்நகரம்

நாட்டின் நலன் குறித்து சரத்குமாா் பரபரப்பு தகவல்

நாட்டின் நலன் குறித்து பேசினால் வெளியே தெரிவதில்லை. ஆனால் ரஜினி, கமல் பற்றி பேசினால் அது பிரபரமாகிறது என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

TOI Contributor 17 Jul 2017, 3:37 pm
நாட்டின் நலன் குறித்து பேசினால் வெளியே தெரிவதில்லை. ஆனால் ரஜினி, கமல் பற்றி பேசினால் அது பிரபரமாகிறது என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sarathkumar sensational information about the countrys interest
நாட்டின் நலன் குறித்து சரத்குமாா் பரபரப்பு தகவல்


மராட்டிய மாநிலத்தில் காமராஜர், சரத்குமார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினாா். அப்போது அவா் பேசியதாவது-

பல இளைஞர்கள் சின்ன தோல்விகளை கூட தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்படி பார்த்தால் நானெல்லாம் 1000 முறை தற்கொலை செய்து இருக்க வேண்டும். நாம் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். தோல்வியடையாமல் யாரும் வெற்றி பெற்றிருக்க முடியாது.

ஜல்லிகட்டிற்காக முதலில் போராடியது சமத்துவ மக்கள் கட்சி. கூடங்குளம் அணு ஆலைக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தியது நாம். தற்போது விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இவையெல்லாம் வெளியே தெரிவதில்லை. ரஜினி, கமலை பற்றி பேசினால் அது பிரபலமாகிறது. ஆனால் நாட்டு நலன், தமிழர் நலனை பற்றி பேசினால் வெளியே தெரிவதில்லை என்று கூறினாா்.

Sarathkumar sensational information about the country's interest

அடுத்த செய்தி