ஆப்நகரம்

ஆச்சரியப்படுத்திய நர்மதா ஆணை; இப்படியொரு அழகைப் பார்த்திருக்க மாட்டீங்க!

நர்மதா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை ஒட்டுமொத்த மாநில மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 18 Sep 2020, 1:54 pm
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணை அமைந்துள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 138.68 மீட்டராக உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அணையில் நீர் நிரப்பி வைக்கும் கொள்ளளவு 121.92 மீட்டரில் இருந்து உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அணையின் நீர் இருப்பு 5,760 மில்லியன் கன மீட்டர் ஆகும்.
Samayam Tamil sardar sarovar dam water level reached its maximum level in gujarat
ஆச்சரியப்படுத்திய நர்மதா ஆணை; இப்படியொரு அழகைப் பார்த்திருக்க மாட்டீங்க!


சிறப்பு வாய்ந்த சரோவர் அணை

சர்தார் சரோவர் அணை முழு கொள்ளளவை எட்டினால் குஜராத் மாநிலத்தின் தண்ணீர் தேவையை இரண்டு ஆண்டுகளுக்கு பூர்த்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணையில் இருந்து வெளியாகும் நீரால் சுமார் 9,000 கிராமங்களும், 165 நகரங்கள் மற்றும் கார்ப்பரேஷன்களும் பயன்பெறும். கடந்த செப்டம்பர் 17, 2017ல் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

முழு கொள்ளளவை எட்டிய அணை

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முறையாக அணை முழு கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்றைய தினம் அணையின் நீர்மட்டம் தனது முழு கொள்ளளவான 138.68 மீட்டர் உயரத்தை அடைந்துள்ளது. தற்போது அணைக்கு 71 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


விவசாய மசோதாக்களுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு? இதிலிருக்கும் சிக்கல்கள் என்னென்ன?

இரண்டாவது முறை அசத்தல்

அதிகப்படியான நீர் வெளியேறுவதால் நீர் மின்சாரம் தயாரிக்கும் மூன்று யூனிட்களும் முழு வீச்சில் செயல்படத் தொடங்கியுள்ளன. நடப்பாண்டில் இரண்டாவது முறையாக அணை முழுமையாக நிரம்பியிருக்கிறது. இதையொட்டி உபரி நீர் முழுவதும் அப்படியே திறந்துவிடப்பட்டுள்ளது. அதிகப்படியான நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதைக் காண மெய்சிலிர்க்க வைப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

அணைக்கு பூஜைகள் செய்து வழிபாடு

அணையில் நிரம்பியுள்ள நீரை உரிய முறையில் பயன்படுத்த அதிகாரிகள் திட்டம் வகுத்துள்ளனர். இந்த சூழலில் நர்மதா மேம்பாட்டு அமைச்சர் யோகேஷ் பட்டேல், எஸ்.எஸ்.என்.என்.எல் மேலாண் இயக்குநர் ராஜிவ் குப்தாவும் சரோவர் அணைக்குச் சென்று பூஜைகள் செய்தனர். இந்நிலையில் தனது இல்லத்தில் இருந்தபடியே குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி இ-பூஜா செய்துள்ளார். தண்ணீர் தட்டுப்பாடும், வறட்சியும் நமது மாநிலத்தின் கடந்த கால வரலாறுகள்.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பதிவு

மறக்க முடியாத தருணம்

குஜராத் மாநிலம் தண்ணீர் தேவையில் தன்னிறைவு அடைந்துள்ளது என்று விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். சரோவர் அணையின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். நேற்றைய தினம் பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதேநாளில் தான் சரோவர் அணையும் முழு கொள்ளளவை எட்டியது. இதுபற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, கடந்த ஆண்டு இதேநாளில் சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலைக்கு மரியாதை செலுத்தினேன். அப்போது சரோவர் அணையின் அழகைக் கண்டு பரவசமடைந்தேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.


மும்பை மக்களுக்கு செம ஹேப்பி நியூஸ்; இனி கவலையே வேண்டாம்!

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி ட்விட்டர் பதிவு

அடுத்த செய்தி