ஆப்நகரம்

சசிகலா 155 நாளில் 13 நாட்கள் தான் ஜெயிலில் இருந்தாராம்... புது தகவலால் அதிர்ச்சி

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்ற சசிகலா, வெறும் 13 நாட்கள் மட்டும் தான் ஜெயிலில் இருந்ததாகவும், மற்ற நாட்களில் வெளியே, அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

TNN 21 Jul 2017, 1:17 pm
பெங்களூர் : சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்ற சசிகலா, வெறும் 13 நாட்கள் மட்டும் தான் ஜெயிலில் இருந்ததாகவும், மற்ற நாட்களில் வெளியே, அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil sasikala in bangalore jail she stay only 13 days
சசிகலா 155 நாளில் 13 நாட்கள் தான் ஜெயிலில் இருந்தாராம்... புது தகவலால் அதிர்ச்சி


தண்டனைப் பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, 5 அறைகளை தனக்காக பயன்படுத்தியதாகவும், தனி சமையல் செய்து தரப்பட்டதாக, சிறைத்துறை டிஐஜி ஆக இருந்த ரூபா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர் தண்டனைப் உறுதி செய்யப்பட்டு, பிப்ரவரி மாதம் 15ம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தண்டனைக்காக சிறையில் அடைக்கப்பட்டு 155 நாட்கள் ஆன நிலையில், அவரை அமைச்சர்கள், உறவினர்கள் சில சந்திக்க வந்த நாட்களில் மட்டும், வெறும் 13 நாட்கள் மட்டும் சிறையில் இருந்ததாகவும், மற்ற நாட்களில் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் சசிகலா குறித்த சில முக்கிய தகவல்கள் டிஐஜி ரூபா வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

அடுத்த செய்தி