ஆப்நகரம்

சுற்றுலா சென்ற குடும்பம் பேருந்து விபத்தில் பலியான சோகம்!

பேருந்து விபத்தால் சுற்றுலா சென்ற ஒரு குடும்பமே பலியான சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Samayam Tamil 14 Nov 2020, 11:12 pm

மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து வறண்ட நதியில் விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், எட்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil பேருந்து விபத்து


பேருந்தில் பயணித்தவர்கள் சுற்றுலாவிற்காக கோவாவுக்கு சென்றுகொண்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் நவி மும்பையிலுள்ள வஷி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீசும் காற்றில் விஷம்: திண்டாடும் மக்கள்!

புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் மாலை 4.30-4.45 மணியளவில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து பாலத்தில் இருந்து 40 அடி ஆழத்தில் விழுந்து வறண்ட தராலே நதியில் விழுந்தது.

போலீசாரும், மீட்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்தோரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். உஷா நாயர் (40), மதுசூதன் நாயர் (42), ஆதித்யா நாயர் (23), சஜன் நாயர் (35), ஆரவ் நாயர் (3) ஆகியோர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநர் உள்பட காயமடைந்த எட்டு பேரும் கராத் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓட்டுநர் மீது இந்திய தண்டனைச் சட்டம், மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி