ஆப்நகரம்

அயோத்தி ராமா் கோவில்: சு.சுவாமி தொடா்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

அயோத்தியில் சா்ச்சைக்குாிய இடத்தில் தன்னை வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தொிவித்துள்ளது.

Samayam Tamil 3 Jul 2018, 7:54 pm

அயோத்தியில் சா்ச்சைக்குாிய இடத்தில் தன்னை வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தொிவித்துள்ளது.

Samayam Tamil Subramanian Swamy


அயோத்தியில் சா்ச்சைக்குாிய இடத்தில் (ராமா் கோவில் இருந்ததாக கூறப்படும் இடம்) வழிபாடு நடத்த தன்னை அனுமதிக்க வேண்டும். ஏனெனில், வழிபாடு நடத்துவது என்பது அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் ஒவ்வொரு இந்தியருக்கும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்று சுப்பிரமணியன் சுவாமி தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தாா்.

இந்நிலையில் தனது மனுவை அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அவா் கோாிக்கை வைத்தாா். இந்நிலைியல் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள நீதிபதிகள் மறுத்துவிட்டனா். மேலும் உங்கள் மனுவில் எப்போது நீதிமன்றம் அனுமதிக்கிறதோ அப்போது வழிபாடு நடத்திக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளீா்கள். எனவே இந்த மனுவை அவசர வழக்காக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் தொிவித்துள்ளனா்.

அடுத்த செய்தி