ஆப்நகரம்

ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் பொருந்தாத ஓரினச்சேர்க்கை தீர்ப்பு

ஓரினச்சேர்க்கை குறித்த உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் பொருந்தாதது என்பதால் அங்குள்ள மக்கள் அதற்காக மேலும் போராட வேண்டிய நிலை உள்ளது.

Samayam Tamil 8 Sep 2018, 3:07 pm
ஓரினச்சேர்க்கை குறித்த உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் பொருந்தாதது என்பதால் அங்குள்ள மக்கள் அதற்காக மேலும் போராட வேண்டிய நிலை உள்ளது.
Samayam Tamil c


ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது அல்ல என்று உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் உடனடியாக பலனளிக்கப்போவதில்லை.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377ன் கீழ் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்ற மாநிலங்களைப் போல ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது. காரணம் ஜம்மு காஷ்மீர் பிரத்யேகமான அரசியலமைப்பு மற்றும் கிரிமினல் சட்டத்தின் கீழ் உள்ளது.

ரன்பிர் தண்டனைச் சட்டம் (Ranbir Penal Code) எனவும் அழைக்கப்படும் இச்சட்டம் இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் நிலவியபோது இயற்றப்பட்டது. இச்சட்டத்தின் பிரிவு 377 ஓரினச்சேர்க்கையை தண்டனைக்குரிய சட்டமாகவே காட்டுகிறது.

இருப்பினும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றும் இதனைச் சுட்டிக்காட்டி இதே உத்தரவை ஜம்மு காஷ்மீருக்கும் விரிவுபடுத்த கோரலாம் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி