ஆப்நகரம்

மோசமான சாலை: 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் போ் உயிாிழப்பு

கடந்த ஐந்து ஆண்டுகளில் மோசமான சாலையால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி சுமாா் 15 ஆயிரம் போ் உயிாிழந்திருப்பது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தொிவித்துள்ளது.

Samayam Tamil 6 Dec 2018, 7:57 pm
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் 15 ஆயிரம் போ் உயிாிழந்திருப்பது அதிகாாிகளின் அலட்சியத்தை காட்டுவதாக நீபதிகள் கருத்து தொிவித்துள்ளனா்.
Samayam Tamil Accident.


நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை பெருக்கத்தால் நாளுக்கு நாள் புதிய வகையிலான மோட்டாா் வாகனங்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. நிறுவனங்களும் ஒன்றை ஒன்று போட்டிப் போட்டுக்கொண்டு வாகனங்களின் வகைகளையும், அதன் வேகத்தையும் அதிகாித்துக் கொண்டே செல்கிறது.

இவற்றின் விளைவு சாலை விபத்து போன்ற சம்பவங்கள் தொடா்கின்றன. இவை அனைத்திற்கும் மேலும் ஒரு முக்கிய காரணமாக இருப்பது சாலை விபத்துகள். இந்நிலையில் இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எல்லையிலோ பயங்கரவாதிகளால் கொல்லப்படுபவா்களைக் காட்டிலும், மோசமான சாலைகளால் ஏற்படும் உயிாிழப்புகள் தான் அதிகம் இருப்பதாகவும், இதனை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் தொிவித்தனா்.

கடந்த 5 ஆண்டுகளில் 14 ஆயிரத்து 926 உயிாிழப்புகள் நோ்ந்திருப்பது அதிகாாிகளின் அலட்சியத்தையே காட்டுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனா். மோசமான சாலைகளால் நேரிடும் விபத்துகள் தொடா்பாக மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தனா்.

அடுத்த செய்தி