ஆப்நகரம்

உச்சநீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்: பயமில்லை என மார்க்கண்டேய கட்ஜூ விளக்கம்

உச்சநீதிமன்றத்தை அவமதிப்பு செய்வதாகக் கூறி தனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், அச்சம் அடையவில்லை என்று மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.

TNN 12 Nov 2016, 1:32 am
உச்சநீதிமன்றத்தை அவமதிப்பு செய்வதாகக் கூறி தனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், அச்சம் அடையவில்லை என்று மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sc issues contempt notice to markandey katju not scared says the retired judge
உச்சநீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்: பயமில்லை என மார்க்கண்டேய கட்ஜூ விளக்கம்


உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜூ அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவது வழக்கம். இதன்படி, கடந்த 2011ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த சவுமியா என்ற பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளப்பட்டு, உயிரிழந்தார். இதுதொடர்பாக, கோவிந்தசாமி என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு, கேரள உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. எனினும், இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, அண்மையில் உத்தரவிட்டது. இதுபற்றி வருத்தம் தெரிவித்த மார்க்கண்டேய கட்ஜூ, உச்சநீதிமன்றத்தின் செயல்பாட்டை காட்டமாகவும் விமர்சித்திருந்தார்.

இதுதொடர்பாக, தற்போது உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்ததாகக் கூறி, கட்ஜூக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவரது கருத்துக்காக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி, இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜரான அவர், காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரை நீதிமன்ற காவலர்கள் அங்கிருந்து வெளியேற்றும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதன்பின் உச்சநீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கட்ஜூ, உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளால் ஒருபோதும் அச்சப்படவில்லை என்றும், நான் பயப்படுவேன் என்று யாரும் எதிர்பார்க்காதீர்கள் என்றும் தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் பற்றி, தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவருக்கு, நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகக் கூறி, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புவது இதுவே முதல்முறையாகும்.

The Supreme Court on Friday issued contempt of court notice to former judge Markandey Katju for criticising judges+ and not the judgment in the Soumya rape case. The top court said Justice Katju's remarks on Justice Gogoi was an assault on three judge bench and it was not criticism of judgment in the Soumya case.

அடுத்த செய்தி