ஆப்நகரம்

சிறையில் தவியாய் தவிக்கும் ப.சிதம்பரம்; ஜாமீன் மனு மீது ஆட்டம் காட்டும் உச்ச நீதிமன்றம்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை வரும் 26ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Samayam Tamil 20 Nov 2019, 11:11 am
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி பெற்று தரப்பட்டது. இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
Samayam Tamil P Chidambaram


இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

காவல் ரோபோ!

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சிபிஐ தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ஜாமீன் வழங்கினர்.

ஆனால் அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்ததால் ப.சிதம்பரத்தால் வெளியே வர முடியவில்லை. இவர் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரது உடல்நிலை கடந்த சில வாரங்களாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து வருகிறது.

எப்ப தான் விழிக்கும் காங்கிரஸ்!

கடந்த 14ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததை அடுத்து, ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தை நாடினார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரத்திடம் எவ்வளவு விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது.

என்னென்ன ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சிபிஐ ஜாமீன் வழங்கிய நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தால் என்ன தவறு என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த வருஷம் பிரச்சினை இல்லை: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை!

இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் 26ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி