கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. தொடக்கம் முதலே இந்த கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவின.
இதன் காரணமாக சுயேட்சைகளுக்கு அமைச்சர் பதவி வழங்கி, முதல்வர் குமாரசாமி பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தினார். ஆனாலும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியை தீர்க்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மஜத, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தனர்.
தனது பதவியை ராஜினாமா செய்கிறார் முதலமைச்சர் குமாரசாமி? கர்நாடக அரசியல் திடீர் திருப்பம்!
இவர்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. இவர்களில் 10 பேர் மும்பைக்கு சென்று, அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி பரபரப்பை கூட்டினர். அவர்களை சமாதானப்படுத்த மும்பைக்கு விரைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவகுமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ராஜினாமா கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை. சபாநாயகர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். அரசியலமைப்பு சட்டப்படி சபாநாயகர் தனது கடமையை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
கர்நாடகா அமைச்சர் சிவக்குமார் மும்பையில் கைது!
இதற்கிடையில் மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் நேற்று ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால் ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்தது. மறுபுறம் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
இத்தகைய சூழலில் இன்று காலை கர்நாடக அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. அதில் தனது ராஜினாமா முடிவை முதல்வர் குமாரசாமி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் டிகே சிவகுமார், முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்ய மாட்டார் என்று கூறியுள்ளார்.
பெரும்பான்மை போயிடுச்சி; ஒட்டுமொத்தமா பதவி விலகுங்க- கர்நாடகாவில் பாஜகவினர் தர்ணா!
இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.எல்.ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு மாலை 6 மணிக்குள் ஆஜராக வேண்டும். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து சபாநாயகர் இன்றே முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக சுயேட்சைகளுக்கு அமைச்சர் பதவி வழங்கி, முதல்வர் குமாரசாமி பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தினார். ஆனாலும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியை தீர்க்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மஜத, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தனர்.
தனது பதவியை ராஜினாமா செய்கிறார் முதலமைச்சர் குமாரசாமி? கர்நாடக அரசியல் திடீர் திருப்பம்!
இவர்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை. இவர்களில் 10 பேர் மும்பைக்கு சென்று, அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி பரபரப்பை கூட்டினர். அவர்களை சமாதானப்படுத்த மும்பைக்கு விரைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் டிகே சிவகுமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ராஜினாமா கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை. சபாநாயகர் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். அரசியலமைப்பு சட்டப்படி சபாநாயகர் தனது கடமையை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டனர்.
கர்நாடகா அமைச்சர் சிவக்குமார் மும்பையில் கைது!
இதற்கிடையில் மேலும் இரண்டு எம்.எல்.ஏக்கள் நேற்று ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால் ஆளும் அரசு பெரும்பான்மையை இழந்தது. மறுபுறம் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
இத்தகைய சூழலில் இன்று காலை கர்நாடக அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது. அதில் தனது ராஜினாமா முடிவை முதல்வர் குமாரசாமி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் டிகே சிவகுமார், முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்ய மாட்டார் என்று கூறியுள்ளார்.
பெரும்பான்மை போயிடுச்சி; ஒட்டுமொத்தமா பதவி விலகுங்க- கர்நாடகாவில் பாஜகவினர் தர்ணா!
இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.எல்.ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு மாலை 6 மணிக்குள் ஆஜராக வேண்டும். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து சபாநாயகர் இன்றே முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.